2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’நிறைவேற்று அதிகாரத்தை இரத்து செய்வது ஆபத்து’

Editorial   / 2018 ஏப்ரல் 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

13ஆவது திருத்தச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வது சரியாக அமையாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் "13ஆவது திருத்தத்திற்கு அமைய மாகாண சபைகள் உருவாக்கத்தின் ஊடாக ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரங்கள் இல்லாமல் செய்யப்படுகின்றது.

மக்கள் விடுதலை முன்னணி, நிறைவேற்று அதிகாரங்களை இல்லாமல் செய்யும் இந்த முன்மொழிவின் ஊடாக ஐக்கிய இலங்கையை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த முயற்சியின் மூலம் மாகாண அரசாங்கங்களின் மீது ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம் இல்லாமல் போகும். ஆவது 13 வது திருத்தத்தை அகற்றாமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாமல் செய்யப்பட்டால். அது நாட்டை அராஜகத்திற்குள் தள்ளிவிடும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X