2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘நீதிமன்றில் அறிக்கையை சமர்ப்பிப்பேன்’

Editorial   / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

திறைசேரிப் பிணைமுறி வழங்கல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும், அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர, நேற்று (18) தெரிவித்தார். 

பிணைமுறி ஆணைக்குழுவின் சாட்சியமளிப்பு அமர்வுகள் நிறைவடைந்துள்ள போதிலும், இவ்விடயத்துக்கு முடிவு காணாமல் ஓயப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

  “இந்த மோசடியின் விவரங்களைக் கண்டுபிடித்தவன் நானே. இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகளை மேற்கொண்டவர் நானே. நான் ஆரம்பித்ததை, முடிக்க வேண்டியது எனது கடமை. இவ்விடயம், நீதிமன்றத்தில் எடுக்கப்படும் வரை, நான் ஓயமாட்டேன்” என்று அவர் தெரிவித்தார். 

அத்தோடு, தேவைப்படுமாயின், இவ்விடயம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .