2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

நீரில் மூழ்கி நபர் பலி

Yuganthini   / 2017 ஜூலை 24 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, திகன பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றின் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் நண்பர்களுடன் சுற்றுலா விடுதிக்குச் சென்று அங்குள்ள நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்தப்போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது உயிரிழந்தவர் ஹேவாஹெட்ட, ரஹதுன்கொட பகுதியைச் சேர்ந்த 33வயதான ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் இன்று (24) அனுமதிக்க இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .