2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘நீர் வெறுப்பு நோய் ஊசி மருந்துகளுக்கு தட்டுபாடு’

Editorial   / 2019 ஜனவரி 13 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர் வெறுப்பு நோய்க்கான ஊசி மருந்துகளுக்கு நாட்டில் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க வைத்தியசாலைகளைப் போன்றே தனியார் வைத்தியசாலைகளிலும் குறித்த ஊசி மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் வைத்தியர் நளின் த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல மருந்துகளுக்கான தட்டுபாடும் அரசாங்க வைத்தியசாலைகளில் நிலவுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தட்டுபாடான நீர் வெறுப்பு நோய்க்கான ஊசி மருந்துகளை நாளைய தினம் வைத்தியசாலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக மருந்து விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் லால் பனாபிட்டிய தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .