2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Yuganthini   / 2017 ஜூன் 22 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

சைட்டத்துக்கு எதிராக  மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது, மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து.  நீர்கொழும்பு வைத்தியசாலை வைத்தியர்கள், இன்று (22) பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு வரும் நோயாளர்களுக்கு மாத்திரம், வைத்தியர்கள் சிகிச்சை அளித்தனர்.

ஆயினும், வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக்குகள் இயங்கவில்லை.

சிகிச்சைக்காக வந்த பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள், ஏமாற்றத்துடன் வீடு திரும்பிச் சென்றதை அவதானிக் முடிந்தது.

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில், 600க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .