2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நெதர்லாந்து, இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளை தாக்கியவர்கள் கைது

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெதர்லாந்து நாட்டு சுற்றுலாப் பயணிகளை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, மிடிகம பிரதேசத்தில் இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகளை தாக்கிய சம்பபவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான 4 பேரே கடந்த 8ஆம் திகதி நெதர்லாந்து சுற்றுலாப் பயணிகளை தாக்கியுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 15ஆம் திகதி மிடிகம கடற்கரையில் வைத்து ஐந்து இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், நேற்று முன்தினம் (17) ஒருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மிடிகம, அஹங்கம மற்றும் மிரஸ்ஸ பிரதேசங்களைச் சேர்ந்த மேலும் மூன்று சந்தேகநபர்கள் இந்த சம்பவம் தொடர்பில் நேற்று இரவு (17, 18 மற்றும் 236 வயது) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடையாள அணிவகுப்பின் பின்னர் குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .