2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிக்கு உயிரிழப்பு தொடர்பில் அறிக்கை கோரல்

Editorial   / 2020 ஜனவரி 20 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹுங்கம பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கி செயற்பட்டதில், பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிக்கை கோரியுள்ளது.

விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு இன்றைய தினம் கடிதம் ஊடாக அறிவிக்கவுள்ளதாக, ஆணைக்குழுவின் செயலாளர் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஹுங்கம பிரதேசத்தில் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்ற பொலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

அந்த சந்தர்ப்பத்தில் அவ்வீதியில் பயணித்த வேனில் இருந்த பிக்கு ஒருவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த 21 வயது பிக்கு, அங்குனுகொலபெலஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் கூறியிருந்தது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .