2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பசிலின் வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு திகதி குறிப்பு

Thipaan   / 2017 ஜூன் 15 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிரான வழக்கின் நீதிமன்ற விசாரணைக்கான தினமாக, நவம்பர் மாதம் 13ஆம் திகதியை கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று (15) குறித்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில், மஹிந்த ராஜபக்‌ஷவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 5 மில்லியன் நாட்குறிப்புகளை திவிநெகும திணைக்களத்தினூடாக அச்சிட்டு,  அரசுக்கு 29.4 மில்லியன் ரூபாய் நஷ்ட்டத்தை ஏற்படுத்தினர்  என்ற குற்றச்சாட்டில், வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X