Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 21 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிக்கப்பட்டுவரும், வழக்கை, வேறு நீதிமன்றுக்கு மாற்ற உத்தரவிடுமாறுக் கோரி, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மனுவை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (21), தீர்மானித்துள்ளது.
குறித்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதவான்களான குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டீ சில்வா முன்னிலையில் இன்று (12), விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, வழக்கு விசாரணைக்கான திகதி இவ்வாறு அறிவிக்கப்பட்டது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்துடன் கூடிய நாட்காட்டிகளை அச்சிட்ட விடயத்தில், அரச நிதியை இவ்வாறு முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளார் என, நீதவான் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago