2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பசிலுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

Editorial   / 2018 ஜூலை 16 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு வெளிநாட்டுக்கு பயணிப்பதற்கான கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும திட்ட நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர் ஹெய்யின்துடுவ முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்ககொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

இதற்கமைய, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 10ஆம் திகதி வரை பசில் ராஜபக்ஷவுக்கு அமெரிக்கா செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீதிமன்றத்தில் உள்ள அவரது கடவுச்சீட்டை இரண்டு இலட்சம் ரூபாய் தனிப்பட்ட பிணையில் விடுவிப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .