2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’பைடன் நிர்வாகம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும்’

Editorial   / 2021 ஜனவரி 27 , மு.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகமானது, மனித உரிமைகள் விடயத்தில் இலங்கைக்கு அழுத்தத்தை வழங்கவுள்ளதைத் தொடரவுள்ளது. 

இந்நிலையில், சுவிற்ஸர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா மீள இணையுமா என்பது பற்றி, இப்போது கூற முடியாது என இலங்கைக்கான ஐ. அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ், கொழும்பிலுள்ள செய்தியாளர்களிடம் நேற்று (26) தெரிவித்துள்ளார். 

எவ்வாறெனினும், இலங்கையில் உண்மையான அமைதி நிலவுவதை உறுதிப்படுத்துவதற்காக ஏனைய நாடுகளுடன் இணைந்து  அமெரிக்கா தொடர்ந்தும் பணியாற்றும் என டெப்லிட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

 மனித உரிமைகள் விடயத்தில் முன்னைய அரசாங்கத்தாலும், தற்போதைய அரசாங்கத்தாலும் மெதுவான முன்னேற்றமே காணப்படுவதாக டெப்லிட்ஸ் மேலும் கூறியுள்ளார். 


இதேவேளை, மனித உரிமைகளுக்கான ஆதரவானது இலங்கையை அச்சுறுத்துவதற்கான முயற்சியொன்றாக பார்க்கப்படக்கூடாது என டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். 

மனித உரிமைகள் சபையான பக்கச் சார்பாக உள்ளதாகத் தெரிவித்து அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகமானது அதிலிருந்து விலகியிருந்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .