2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

படுக்கை இல்லாமல் குழந்தை உயிரிழப்பு

J.A. George   / 2021 ஏப்ரல் 28 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அச்சுதாபுரத்தை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை வைத்தியசாலை படுகை கிடைக்காத நிலையில்  அம்பியுலன்ஸிலேயே உயிரிழந்தது.

ஜான்விதா  என்ற குழந்தைக்கு ஒரு வாரமாக சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. 

குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து பெற்றோர் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். 

ஆனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால் குழந்தையை சேர்த்துக்கொள்ள தனியார் வைத்தியசாலை மறுத்து விட்டது. 

சந்தேகத்தின் பேரில் குழந்தை ஜான்விதாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து விசாகப்பட்டினம் கே.ஜி.எச். அரசு வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸில் குழந்தையை அழைத்து சென்றுள்ளனர். 

ஆனால் அங்கு ஒக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் அனைத்தும் நிரம்பியதால் படுக்கைக்காக குழந்தை அம்பியுலன்ஸிலேயே காத்திருந்தது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் காத்திருந்த குழந்தை அம்பியுலன்ஸிலேயே உயிரிழந்தது.

குழந்தையை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என வைத்தியசாலை முன்பு காத்திருந்த ஜான்விதாவின் பெற்றோர் கண்ணீருடன் கதறிய காட்சி காண்போரையும் கலங்க செய்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .