2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பதிவுகள் தொடர்பில் அறிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

Yuganthini   / 2017 ஜூன் 29 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டுக்கு புதிய மாணவர்களைப் பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்தார்.

புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான கால எல்லை, நாளை (30) நிறைவடையயிருந்த நிலையில், இந்தக் கால எல்லை எதிர்வரும் மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தபால் சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பின் காரணமாகவே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக, பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் பதிவு செய்தல் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் அறிந்துகொள்வதற்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அறிமுகப்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கங்களான, 0112695302, 0112695301​ ஆகிய இலக்கங்களுக்குத் தொடர்பை ஏற்படுத்த  முடியும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X