Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Editorial / 2019 ஜூன் 15 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன், இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம் என, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அவரின் இயக்கத்தினருக்கும் பெரும் ஆதரவுத் தளமிருந்தது என்றும் இப்போதும் இருக்கின்றது என்றும் கூறியுள்ள அவர், அவர்களுக்கென்று கட்டமைப்பு, அரசியல் கொள்கை இருந்தது என்றும் அவர்களுக்கென்று ஒரு விடுதலைப் போராட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது என்றும் கூறியுள்ளார்.
நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சுக் காலத்தில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கிளிநொச்சியில் தாங்கள் நேரில் சந்தித்ததாகவும் அவர், தனக்கும் தனது கட்சியினருக்கும் பலத்த வரவேற்பு வழங்கியிருந்தார் என்றும் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் எங்களுடன் அவர் மனம் விட்டுப் பேசியதாகவும் அவர் கூறினார்.
துரதிஷ்டவசமாக அந்தச் சமாதானக் காலம் நீடிக்கவில்லை என்று தெரிவித்த அவர், மீண்டும் போர் ஆரம்பமானபோதும் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் குறுகிய நோக்கத்தில் இருந்ததில்லை என்றும் கூறினார்.
உரிமைகளைக் கேட்டு நிற்கும் தமிழ் மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர்களின் தாக்குதல்கள் இருந்தன என்றும் பிரபாகரனுக்கு நிகர் அவரே ஆவார் என்றும் இலங்கையில் இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது என்றும் எனவே, பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம் என்றும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முஸ்லிம்களின் மத்தியிலிருந்து ஒரு பிரபாகரன் உருவாக இடமளிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருப்பது அபத்தமான ஒன்று என்று கூறியுள்ள அவர், இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய கும்பலுக்கென்று எதுவுமே கிடையாது என்றும் இவர்களுக்கு முஸ்லிம் சமூகத்திட்டமிருந்து எந்த ஆதரவும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அப்படியான கும்பல் பிரபாகரன் எனும் தகுதிக்கு வந்து விடுவார்கள் என்று அச்சப்படுகின்ற அதீதமான அச்சப்போக்கு அபத்தமானது என்றும் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை, இலங்கை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
4 hours ago
6 hours ago
8 hours ago