2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்

Gavitha   / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் பயணிக்கும் பிரயாணிகள், தாங்கள் பயணிக்கும் பஸ்ஸின் இலக்கத்தைக் குறத்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்னர்.

அத்துடன், பஸ்ஸின் தகவல்களை பிரயாணிகள் பார்க்கும் படியாக, பஸ்ஸின் இலக்கம் உள்ளிட்ட தொலைபேசி இலக்கங்களை, பஸ்ஸில் ஒட்டிவைக்குமாறு, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பஸ் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரொருவர் பஸ்ஸொன்றில் பயணித்திருந்தால், அவருடன் பயணித்திருக்கும் மற்றைய பயணிகளை கண்டறிவதற்கு, இது இலகுவாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மினுவான்கொட கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களைக் கண்டறிவதில், சிக்கல் ஏற்பட்டது என்றும் இப்பகுதிகளில் ஓட்டோக்கள் மற்றும் பஸ்களில், பயணிகளின் தரவுகளோ அல்லது பயணிகளிடம் பஸ்களின் தகவல்களோ இல்லாமல் இருந்தது பாரிய பிரச்சினையாக இருந்தது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பொதுமக்கள், தாங்கள் அன்றாடம் எந்த எந்த பகுதிகளுக்குச் செல்கின்றார்கள், யாரைச் சந்திக்கின்றனர் என்பது தொடர்பாகவும் ஒரு குறிப்புப் புத்தகத்தில் குறத்து வைக்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .