2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பியாலுடன் நெருங்கி பழகிய 22 பேர் தனிமையில்

Niroshini   / 2021 ஜனவரி 19 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கேகாலையில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்று (19) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவரது இரண்டு மகன்கள், ஓட்டுநர், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் ஆகியோர்  தொற்றுக்கு இலக்காகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், அமைச்சரின் நெருங்கிய நண்பர்கள் என அடையாளம் காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேரை, சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .