2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பரிசோதனைகளைக் கூட்டுமாறு மனோ கோரிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்சி அரசியலை விட, ஊரடங்குக் கைதுகளை விட, கொரோனா பரிசோதனைகளைக் கூட்டுமாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைதளத்திலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஜ, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடமே, அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

கொரோன தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைச் சோதிப்பதே முதல் தேவையாக உள்ளது என்றும் “கொரோனா, உலக வரைபடத்தில் இலங்கை இன்று எங்கே இருக்கிறது என்பதை முதலில் அறிவோம்” என்றும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X