2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புலமைப் பரிசில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 21 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெற்று முடிந்த 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நாளை தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதென, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் கம்பஹா மாவட்டம் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய கல்வி வலயங்களில், பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படாதென்றும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இப்பணிகள் நாளை தொடக்கம் 27ஆம் திகதி வரை, 39 மதிப்பீட்டு மத்திய நிலையங்கள், 391 மதிப்பீட்டு சபைகளிலும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .