2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்; மூவர் காயம்

Editorial   / 2020 ஏப்ரல் 03 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவை, எகொடஉயன பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த மோட்டார் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து மொரட்டுவை நோக்கி குறித்த மோட்டார் வாகனம் பயணித்த நிலையில் நேற்றிரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது அதில் பயணித்த 4 பேரில் 3 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், காயமடைந்தவர்கள் பொலிஸாரின் பாதுகாப்புடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மொரட்டுவை நகரில் உள்ள வீதித்தடையில் வாகனத்தை நிறுத்துமாறு பாதுகாப்பு தரப்பினரால் சமிக்ஞை செய்யப்பட்டுள்ளது.

எனினும், பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த குறித்த வாகனம் எகொடஉயன பகுதிக்கு அருகில் உள்ள வீதித்தடையிலும் நிறுத்தாமல் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் எகொட உயன புதிய பாலத்துக்கு  அருகில் உள்ள வீதித்தடையில் மோட்டார் வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை பிறப்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

குறித்த சிற்றூர்ந்து பொலிஸார் இருந்த திசையை நோக்கி பயணித்துள்ளதுடன், அவர்களை மோதி செல்வதற்கு முயற்சித்ததாகவும் இதன்போது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகனத்தில் பயணித்தவர்கள், பத்தரமுல்லை பெலவத்தை பகுதியைச்சேர்ந்தவர்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .