2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பலாங்கொடையிலும் ‘சேனா’ தாக்கம்

Editorial   / 2019 ஜனவரி 13 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘சேனா’ படைப்புழு மற்றும் அவற்றின் கூட்டுப்புழுக்களுடன் காணப்பட்ட ஒரு தொகை சோளத்தை, இரத்தினபுரி – பலாங்கொடை வார சந்தையில், சந்தைப்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பலாங்கொடை உதவி விவசாய பணிப்பாளரின் தலைமையில் குறித்த சோளம் தொகை கண்டறியப்பட்டுள்ளதுடன், வார சந்தையின் வர்த்தக நிலைய உரிமையாளர்களுடனும் இதுதொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறித்த சோள தொகையை உடனடியாக எரித்துவிடுமாறு பணிப்பு விடுக்கப்பட்டதோடு, வார சந்தையில் சந்தைப்படுத்தலுக்காக வைக்கப்பட்டிருந்த மற்று​மொரு தொகை சோளத்தையும் பரிசோனைக்குட்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .