2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்?

Editorial   / 2018 ஜூலை 16 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழைய தேர்தல் முறையில், மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் ஆலோசனைக்கு அமைய, மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக கூடிய போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

புதிய முறைமைக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமாகாத விடயம் என ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து பங்காளிக் கட்சிகளும் மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

எவ்வாறெனினும், சப்ரகமுவ, வட மத்திய, வடக்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறுமென அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .