Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சின்னசாமி ஷிவானி
பஸ் தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்த இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து, “இது பயங்கரவாதிகளின் செயற்பாடு இல்லை” என்றார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (21) இடம்பெற்ற, செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவ நோக்கி அந்த பஸ் பயணித்தாலும், அதில் பயணித்த படைத்தரப்பைச் சேர்ந்த பலர், இடையிலேயே ஏறியுள்ளனர். அவர்களில், எவரேனும் எடுத்துச்சென்ற கிரைனைட் வகையைச் சேர்ந்த குண்டுடொன்றே இவ்வாறு வெடித்திருக்கலாம். இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதோடு, இராணுவத் தரப்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
“இந்தச் சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட ஒன்றல்ல. மக்களுக்கு தவறான செய்திகள் பரவலாம். எனவே, இந்த விடயம் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
19 Apr 2024
19 Apr 2024
19 Apr 2024