Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 21 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை மாணவியை கடத்தி சென்ற நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்படி கடத்தப்பட்ட மாணவி, நாவுல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடையரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு குறித்த மாணவி பாடசாலை செல்லும் வழியில் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவரது பெற்றோர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு வருட காலப்பகுதியில் சந்தேகநபர், கடத்தி செல்லப்பட்ட மாணவியுடன் கணவராக வாழ்ந்து வந்துள்ளதோடு, இரண்டு வருட காலப்பகுதியில் பல்வேறுப்பட்ட இடங்களில் வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த சந்தேகநபர் குளியாப்பிட்டி பிரதேசத்தில் வசித்துவந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று (20) நாவுல நீதவான் நீதிமன்றத்தில் இவரை ஆஜர்ப்படுத்தியதாகவும் குறித்த மாணவியை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
4 hours ago
4 hours ago
6 hours ago