2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ’சொல்டா’ கைது

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த  'சொல்டா' என அழைக்கப்படும் அசித  பிரேமதிலக, துப்பாக்கிச் சகிதம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றவியல் பிரிவினரால், பொரளை பகுதியில் வைத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள செல்டா, பாதாள உலகத் தலைவன், 'அங்கொட லொக்கா' உடன் இணைந்து பல குற்றச்செயல்களை புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொட்டாவை மற்றும் மாலபே ஆகிய பிரதேசங்களில் சமீபத்தில் இடம்பெற்ற இரண்டு கொலைச் சம்பவங்களுடன் சொல்டாவுக்கு தொடர்புகள் காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், அவரிடமிருந்த குறித்த இரண்டு கொலைகளுக்கும் பயன்படுத்திய 9 மில்லிமீற்றர் துப்பாக்கி மற்றும் 5 இலட்சம் ‌ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைபொருள் மற்றும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.


படங்கள்; பா.நிரோஸ்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .