2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘பாதாள குழுக்கள் ஆடுகின்றன; ஐ.ஜி.பி தியானம் செய்கின்றார்’

Editorial   / 2018 ஜூன் 18 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள குழுக்களின் செயற்பாடுகள் யாவும், நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன என்றும்  அவற்றுக்கு, இந்த அரசாங்கமே முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டுமென்றும் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எம்.பி, பொலிஸாரே அவற்றை கட்டுப்படுத்த வேண்டுமெனினும், பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி), தியானம் செய்வதாகவும் பாதாள உலகக் கோஷ்டியினரை இல்லாதொழிப்பதை ஒருபுறம் வைத்துவிட்டு, தன்பின்னால் துரத்துகின்றனர் எனவும் குற்றஞ்சாட்டினார்.

அநுராதபுரத்துக்கு நேற்று (17) விஜயம் செய்திருந்த அவர், ஸ்ரீ மகா போதி மற்றும் ருவன்வெலி மஹாசாய ஆகியவற்றில் இடம்பெற்ற மதவழிபாடுகளில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, கலகொடஅத்தே ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மஹிந்த ராஜபக்‌ஷ, “இந்த விவகாரம் தொடர்பில், மெதகொட தேரரின் கருத்து சரியானதாகும்” என்றார்.

“அரசாங்கம் வேண்டுமென்றே, ஞானசார தேரரை சிறையிலடைத்துள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .