Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சரியான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாமையே, ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் ஐந்து பேர் உயிரிழப்பதற்கு காரணமாக அமைந்ததாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த தொழிற்சாலையில், இரசாயனப் பொருட்களை பயன்படுத்தும்போது தொழிலாளர்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சரியான பாதுகாப்பு நடைமுறைகள் மிக நீண்டகாலமாகவே மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சின், சூழல் பாதுகாப்பு பிரிவின், சூழலியல் நிபுணர்கள் குறித்த தொழிற்சாலைக்கு கள விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சூழல் பாதுகாப்புத் தொடர்பிலான அனுமதிப்பத்திரம் குறித்த தொழிங்சாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த அனுமதிப்பத்திரம் 2017ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி முதல் இந்த வருடம் நவம்பர் 10ஆம் திகதி வரை செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கும், ஹேமந்த ஜயசிங்க, எனினும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை குறித்த தொழிற்சாலை நிர்வாகம் பின்பற்றவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago