2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாலியல் இலஞ்சம் கோரிய பொறுப்பதிகாரி இடைநிறுத்தம்

Editorial   / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுவதியிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக கூறப்படும் நுகேகொடை பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட பொலிஸ் நிலையமொன்றில் பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

நிதி மோசடி தொடர்பில் குறித்த யுவதி முறைப்பாடு செய்துள்ள நிலையில், அவருக்கு சாதகமான முறையில் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து இவ்வாறு பாலியல் இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, குறித்த பொலிஸ் உயரதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .