2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பிக்கு உட்பட மூவருக்கு கூரிய கத்தியால் குத்து

Editorial   / 2017 டிசெம்பர் 18 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவனெல்ல, அரநாயக்கவில், பிக்கு ஒருவர் உள்ளிட்ட மூவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்திய ஒருவர் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

இரு குழுவினருக்கு இடையே இடம்பெற்ற வாக்குவாதம் காரணமாக, சந்தேகநபர், பிக்குவைக் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார் என்பதுடன், மேலும் இருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

சம்பவத்தை அடுத்து, காயங்களுக்கு உள்ளான மூவரும், அரநாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரைத் தேடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டதை அடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

தாக்குதலுக்கு உள்ளான மூவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக, கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்
 -பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X