2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிக்கு உள்ளிட்ட 10 பல்கலைக்கழக மாணவர்கள் கைது

Editorial   / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்கு ஒருவர் உள்ளிட்ட 10 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது குழப்ப விளைவிக்க முயன்ற  குற்றச்சாட்டில்  குறித்த பிக்கு மாணவர் உள்ளிட்ட 10  மாணவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் குழப்பத்தை தோற்றுவித்ததோடு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

2016/17 ஆம் கல்வியாண்டுக்காக, பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், பௌத்த சமயம் மற்றும் பௌத்த ஆய்வுத்துறைக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்வது இடைநிறுத்தப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .