2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'பிஜி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை’

Editorial   / 2018 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசுபிக் கடலில் அமைந்துள்ள பிஜி மற்றும் டொன்கா தீவுகளுக்கு அருகில் ஏற்பட்டுள்ள 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தல் இல்லையென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த தீவுகளின் கடற் கரையிலிருந்து, 200 மீற்றர், தொலைவிலும் 560 கிலோமீற்றர் கடல் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தின் தகவலுக்கமைய, இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று கூறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள், அல்லது உயிரிழப்புகள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .