2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பிணைமுறி மோசடி; 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம்

Editorial   / 2019 ஜூலை 19 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர்களை தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசுப்பிணை மற்றும் தலா 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் மூவரடங்கிய விசேட நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இதன்போது, வழக்கின் முதலாவது சந்தேக நபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை கைதுசெய்வதற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான  சிரேஷ்ட மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் பிரியந்த நாவான, நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X