2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிணைமுறி விவகாரம்: திங்களன்று பிரதமர் ஆஜர்

Editorial   / 2017 நவம்பர் 17 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சித்தல் மற்றும் புலனாய்வு செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் திங்கட்கிழமை (20) முன்னிலையாகுமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அவ்வாணைக்குழு நேற்று அறிவித்தது.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே, பிரதமரை ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையாகுமாறு அறிவித்துள்ளது.

பிணைமுறி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னால் ஆஜராக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எப்போதும் தயாராக இருக்கிறாரென, பிரதமர் அலுவலகம், கடந்த மாதமே அறிவித்திருந்தது.

ஆணைக்குழுவின் அண்மைய அமர்வுகளில், பிரதமரின் பெயர் குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என, பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருந்த ஊடகக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பான ஊடகக் குறிப்பில், “பிணைமுறி ஏலங்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் அண்மைய நாட்களில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான விளக்கங்களை அளிப்பதற்கு அவர் தயாராக உள்ளார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .