Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2018 மே 25 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
நாட்டைத் துண்டாடுவதற்கோ அல்லது ஆயுதங்களை ஏந்தி சிவில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கோ அல்லது அவற்றுக்கான பின்புலத்தைத் தயாரிப்பதற்கோ, எவ்வகையிலும் நாட்டுக்குள் இடமளிக்கவேண்டாமென, பாதுகாப்புத் தரப்பினருக்கு, அரசாங்கம் அண்மையில் ஆலோசனை வழங்கியிருந்தது.
அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின்போதே, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட சகல பாதுகாப்புப் பிரதானிகளுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இவ்வாறான ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் எனத் தகவல் தெரிவிக்கின்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலும் நாட்டைப் பிரிப்பதற்கோ அல்லது ஆயுதங்களைக் கொண்டுவந்து போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபவதற்குகோ ஒருபோதும் இடமளிக்கவேண்டாமென அறிவுறுத்தியுள்ள அவ்விருவரும், எந்நேரமும் விழிப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நினைவுகூரல் நிகழ்வுகளுக்குப் பின்னர், அவ்வாறான எவ்விதமானதொரு முயற்சிகளும் முன்னெடுக்கப்ப டவில்லையென, பாதுகாப்புச் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அறியமுடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago