2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார் பிரதமர் ரணில்

Editorial   / 2018 டிசெம்பர் 17 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பிரதமராக, 5ஆவது முறையாகவும் நேற்றுப் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட  ரணில் விக்கிரமசிங்க, தான் பதவியேற்ற சில மணித்தியாலங்களில் அலரி மாளிகையிலிருந்து வெளியேறி, கொழும்பு - 07இல் அமைந்துள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

மேலும், பிரதமரின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்க நேற்றுப் பகல், அலரி மாளிகையிலிருந்து  வெளியேறியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையில் தொடர்ந்து தங்கியிருக்க தீர்மானித்ததுடன் கடந்த 51 நாட்களாக பிரதமர் ரணில் உள்ளிட்டவர்கள் அலரி மாளிகையிலேயே நிரந்தரமாகத் தங்கியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .