2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

பிரதேச சபை உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்

Editorial   / 2019 மே 24 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோமாகம பிரதேச சபை உறுப்பினர் கமல் சந்தனவின், மீகொட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது, இன்று (24) அதிகாலை, இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில், பிரதேச சபை உறுப்பினரின் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டின் யன்னல்  கண்ணாடிகள் என்பவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலரால், இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில், மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .