2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிரேரணை நிறைவேறியது:சபை ஒத்திவைக்கப்பட்டது

Editorial   / 2018 நவம்பர் 16 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அதிக பெரும்பான்மையுடன் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது.

கண்களால் பார்த்து பெரும்பான்மை அறிந்த சபாநாயகர், நவம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு, நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைத்தார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய அவரது ஆசனத்தில் அமராமலே சபை ஒத்திவைப்பு குறித்த அறிவிப்பை விடுத்திருந்தார்.

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சபாநாயகர் அழைத்து வரப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெயரில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என, அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இன்று (16), நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலையின் காரணமாக, சபாநாயகர் மேற்கண்டவாறு நடவடிக்கை எடுத்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .