2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புகையிரத சேவைகளுக்கு தடை ஏற்படுத்தினால் நடவடிக்கை

Yuganthini   / 2017 ஜூன் 22 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகையிரத சேவைகளுக்கு தடை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 

புகையிரத உதவி சாரதிகள் சங்கத்தினர் நேற்று (21) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வரும் நிலையிலேயே அமைச்சர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

புகையிரத சேவைகளுக்கு சிலர் தடைகளை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் கிடைத்ததற்கு அமையவே, அமைச்சர் சாகல ரத்னாயக்க இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, புகையிரத உதவி சாரதிகள் சங்கத்துக்கு ஏதாவது பிரச்சினைகள் காணப்பட்டால், அது தொடர்பில் கலந்துரையாடலை முன்னெடுக்க தயாராக இருப்பதாக, பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .