2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

புத்தளத்தில் வௌ்ளம்- மீட்புப் பணியில் இராணுவத்தினர்

Editorial   / 2018 மே 25 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

புத்தளம் மாவட்டத்தில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில், இன்று அதிகாலை (25) முதல், கஜபா ரெஜிமென்து படையணியைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

புத்தளம்- தம்போவ, நாத்தன்டிய, மஹாவெவ, பள்ளம, மாதம்பே ஆகிய பிரதேசங்களில் 300 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1000 பேர், வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின், உதவி
முகாமைத்துவப் பணிப்பாளர், ஏ.எம்.ஆர். அலஹகோன் தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X