2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புலனாய்வு பிரிவினரும் தயார்

Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு உத்தரவை மீறி, கொழும்பு, சன நெரிசல் மிக்க பகுதிகளில் இரவு வேளைகளில் சுற்றிதிரிபவர்கள், ஒன்று கூடுபவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளை புலனாய்வு பிரிவினர் இன்றிலிருந்து (3) முன்னெடுக்கவுள்ளனரென, பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவை கவனத்தில் எடுக்காத சிலர், இரவு நேரங்களில் தொடர்மாடி மனைகளில் ஒன்று கூடுவதாக கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே ஊரடங்கு உத்தரவை மதித்து வீடுகளுக்குள்ளே இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .