2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புலனாய்வு பிரிவு அதிகாரிகளாக காதல் ஜோடியிடம் கொள்ளையிட்ட இருவர் கைது

Editorial   / 2018 ஜூலை 17 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பாலித ஆரியவன்ஸ

பதுளை- துங்ஹிந்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிட  வந்த காதல் ஜோடியிடம் தாம் பொலிஸ் புலனாய்வுப்    பிரிவினர்கள் எனத் தெரிவித்து, குறித்த ஜோடியிடமிருந்து 1500 ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற இருவர் துங்ஹிந்த வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரால் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்று  (16) பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 30ஆம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த காதல் ஜோடி 17 வயதான பாடசாலை மாணவர்களெனவும், அவர்களிடம் கொள்ளையிட்டவர்கள் 23 மற்றும் 25 வயதான மஹியங்கனைப் பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .