Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2017 நவம்பர் 17 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.கணேசன், ஆ.ரமேஷ், டி.சந்ரூ)
நுவரெலியா ஹாவாஎலிய பகுதியில் பெண்ணொருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடரில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஹாவாஎலிய பகுதியில் உள்ள மின்சார சபை அலுவலக அருகாமையில் இன்று (17) காலை 11 மணியளவில் பெரியசாமி சியாமளா (41) என்ற பெண் சடலமாக மீட்கப்பட்டார்.
கணவருடன் ஏற்பட்ட விரிசலால், கணவரை பிரிந்து தமது பிள்ளையுடன் குறித்த பெண் தனியே வசித்து வந்துள்ளதாக பொலிஸார்மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த பெண் இன்று காலை ஹாவாஎலிய பகுதியில் சமூர்த்தி வங்கி ஒன்றுக்கு பணம் வைப்பீடு செய்ய சென்று மீண்டும் வீடு திரும்பிய வேளையில் அப்பகுதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபை அலுவலகத்துக்கருகில் கழுத்து மற்றும் கைகள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது இவ்வாறிருக்க குறித்த பெண்ணின் கணவன் நஞ்சு அருந்திய நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் இன்று (17) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்திற்கு பின்னரே இவர் நஞ்சருந்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணவரே குறித்த கொலையை செய்திருக்கலாம் என நுவரெலியா பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago