2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பேரறிவாளனின் சிறை விடுப்பு நீடிப்பு?

Editorial   / 2017 செப்டெம்பர் 23 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு, மேலும் ஒரு மாத காலம், சிறை விடுப்பு நீட்டித்து, தமிழக அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 26 ஆண்டுகளுக்கு மேல், தண்டனை பெற்ற பேரறிவாளனை, பரோலில் விடுவிக்க வேண்டும் என்று, அவரது தாய் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் பேரில், அவர் ஓகஸ்ட் 24ஆம் திகதி முதல், ஒரு மாத காலம் சிறை விடுப்பில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், நாளையுடன் (24) அவரது பரோல் காலம் முடிவடையவுள்ளது. இதைத் தொடர்ந்து, அவரது தந்தைக்கு, மேலும் இரு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியுள்ளதால், பேரறிவாளனின் சிறை விடுப்பை, மேலும் நீட்டிக்க வேண்டும் என்று, தாய் அற்புதம்மாள், தமிழக அரசாங்கத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .