2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்கு பூட்டு

Editorial   / 2018 ஜூலை 17 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை காலவரையின்றி மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பரீட்சையில் தோற்றுவதற்கு மாணவர்களின் வரவு 80 சதவீதம் காணப்பட வேண்டுமெனவும், இவ்வாறு வருகைத் தருபவர்களே பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவரென பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்களால் முன்னெடுக்கபட்டுள்ள சில நடவடிக்கைகளால் குறித்த பீடத்தை காலவரையறையின்றி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொறியியல் பீட மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்திலிருந்து உடனடியாக வௌியேற வேண்டுமென்பதுடன்,  இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் இருப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாக சபை தெரிவித்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .