2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

​‘பொன்சேகாவுக்கு கிடைக்கும்’

Editorial   / 2018 பெப்ரவரி 26 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிராந்திய அ​பிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, வெளிநாட்டிலிருந்து இன்னும் திரும்பவில்லை. அவருக்கு, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சுப் பதவி கிடைக்குமென்ற நம்பிக்கை இருப்பதாக, சமூக வலுவூட்டல், நலம் மற்றும் கண்டிய பாரம்பரிய பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.

சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சுப் பதவியை, சரத் பொன்சேகாவுக்கு வழங்கவேண்டுமென, நாங்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்தோம் எனத் தெரிவித்த பிரதியமைச்சர் ரஞ்சன், அதற்கான கையொப்பம் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டோம். எனினும், அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா, ஆகியோரே அவ்வாறான செயற்பாடொன்று தேவையில்லையென தெரிவித்துவிட்டனர் என்றார்.  ஜனாதிபதி செயலகத்தில் குழுமியிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X