2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொலிஸாரால் அகற்றப்படவுள்ள வாகனங்கள்

Editorial   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பிரதான வீதிகள் மற்றும் நடைபாதைகளில்  மக்களுக்கு தடையேற்படுத்தும் வகையிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் பொலிஸாரால் அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வாகனங்கள் இவ்வாறு நிறுத்தப்படுவதால், தேவையற்ற விதத்தில் ​வாகன நெரிசல் ஏற்படுவதுடன் இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காகவும் வாகனங்களை அப்புறப்படுத்த தீர்மானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 1984 இல 4 இற்கு அமைய மோட்டார் வாகனச் சட்டத்தின் 167 (4) மற்றும் (5) ஆகிய உப உறுப்புரைகளுக்கு அமைய வாகனங்கள் அப்புறப்படுத்தப்படுமென  பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.

இந் நடவடிக்கையானது நாடுபூராகவும் உள்ள பொலிஸ் நிலையங்களால் முன்னெடுக்கப்படுமென்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .