Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 நவம்பர் 19 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெறுமதிக்க பறவைகளை சட்டவிரோதமாக கடத்தும் செயற்பாட்டில் மிக நீண்ட காலமாக ஈடுபட்டு வந்த 6 பேர் தங்கல்ல பொலிஸாரினால் நேற்றைய தினம்(18) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை கைதுசெய்த சந்தர்ப்பத்தில் இவர்களிடம் இருந்து 50 இலட்சம் பெறுமதியான 23 பறவைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் அவிசாவளை,ராகம,பாணந்துறை மற்றும் குருணாநகல் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மிக நீண்டகாலமாக குறித்த கடத்தல் சம்பவம் இடம்பெற்று வந்துள்ளதாகவும்,கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலேயே இந்தக் கடத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைக்காக சந்தேகநபர்கள் மாதாந்தம் 50,000 ரூபாய் பெறுமதியான அதிசொகுசு வாகனம் ஒன்றினையும் பயன்படுத்தி வந்துள்ளதாகவும்,இவ்வாறானதொரு கடத்தல் சம்பவம் ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவை என்றும் தங்கல்ல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago