2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பொலிஸ் அதிகாரி மீது கத்திகுத்து

Editorial   / 2019 மார்ச் 18 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பக்மீகொல்ல பகுதியில், கடமையிலிருந்த பொலில் அதிகாரியொருவர், கத்திகுத்துக்கு இலக்கான நிலையில் , குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரொருவரை கைது செய்வதற்காக நேற்று (17) சென்றிருந்த போதே, சந்தேகநபர் பொலிஸ் அதிகாரியை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்செல்ல முற்பட்டுள்ளார். இதன்போது, கடமைக்குச் சென்றிருந்த மற்றுமொரு பொலிஸ் அதிகாரி, சந்தேகநபரை ​மடக்கிப் பிடித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சோதனையிட்ட  போது, அவரிடமிருந்து வெளிநாட்டில்  உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

பக்மீகொல்ல பகுதியைச் சேர்ந்த, 22 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .