2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2018 ஜூலை 22 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரம், எல்ல பிரதான வீதி, அம்பன்பொல பிரதேசத்தில் வைத்து,  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிசோதனைக்காக லொரியொன்றை நிறுத்த முற்பட்ட வேளையில்,  குறித்த லொரியில்  விபத்துக்குள்ளாகி,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பன்பொல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ,ரத்னாயக்க (38341) என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே சம்பவத்தில் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த லொரியின் சாரதியை கைது செய்துள்ளதோடு, லொரியையும் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்தப் பொலிஸார், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .