2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கான்ஸ்டபிளுக்கு கொரோனா

J.A. George   / 2020 ஒக்டோபர் 30 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெலியத்த கலகம பிரசேதத்தை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக பொலியத்த பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பில் கடமையாற்றிய ஒருவர் என்றும் அங்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்று (29) உறுதியாகியுள்ளது.

அவர் கொழும்பில் இருந்து தனது வீட்டுக்கு சென்றுள்ள நிலையில், அவரது வீட்டுக்கு அருகிலுள்ள சுமார் 26 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பெலியத்த பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் சிகிச்சைக்களுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .