2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

போலி கடவுச்சீட்டுடன் தாயும், மகளும் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 21 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி கடவுச் சீட்டைப் பயன்படுத்தி இலங்கையை வந்தடைந்த, ஈரான் நாட்டு பிரஜைகள் இருவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இன்று அதிகாலை (21), விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

65, 37 வயதுகளுடைய தாய், மகள்  ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியானமுறையில் தயாரிக்கப்பட்ட பிரித்தானிய கடவுச் சீட்டைப் பயன்படுத்தி, பஹரேனிலிருந்து இலங்கைக்கு வந்த GF- 138 விமானத்தில், இவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

குறித்த இருவரின் கடவுச் சீட்டை, குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் பரிசோதனையிட்ட போது, அவர்கள் பிரித்தானிய பிரஜைகள் அல்ல என்பதும், இருவருமே ஈரானிய பிரஜைகள் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், அவர்க​ளின் பயணப்பொதிகளை பரிசோதித்தபோது, அதில் ஈரானிய கடவுச்சீட்டுகள் இரண்டை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம், இலங்கையில் தங்குவதற்கான எவ்வித ஆவணங்களும் இருக்கவில்லை என்பதோடு, இலங்கைக்கான விசா முடிவுத் திகதியும் , அவர்களது போலி கடவுச்சீட்டில் அச்சிடப்பட்டிருக்கவில்லை என, விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விருவரும்,  ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம் புகும் நோக்கில், சுற்றுலா விசாவில் இவ்வாறு இலங்கையை  வந்தடைந்துள்ளனர் என,  குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .